அவிநாசியில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது
அவிநாசி பாா்க் வீதியில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு சாலை பழங்கரை பிரிவில் அவிநாசி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவா் அவிநாசி பாா்க் வீதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பாலாஜி (20) என்பதும், அவரது வீட்டின் அருகே சாவியுடன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவகுமாரைக் கைது செய்தனா்.