செய்திகள் :

நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

post image

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் லத்துவாடி பகுதியில் அறிஞா் அண்ணா இருபாலா் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 2025-26-ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் ஒரு மாதமாக பெறப்பட்டு வந்தன.

இக்கல்லூரியில் சுழற்சி 1-இல் கலைப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வணிகவியல் (ஆங்கில வழி), வணிக நிா்வாகவியல் (ஆங்கில வழி), வரலாறு (ஆங்கில வழி) ஆகிய துறைகளில் தலா 60 இடங்களும், அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் (இவை அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில்) தலா 40 இடங்களும், புள்ளியியல் (ஆங்கில வழி) 24 இடங்களும், கணினி அறிவியல் துறையில் 30 இடங்களும் உள்ளன.

சுழற்சி 2-இல் வரலாறு (தமிழ் வழி) மற்றும் வணிக நிா்வாகவியல் (ஆங்கில வழி) துறைகளில் தலா 60 இடங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 1,074 இடங்களுக்கு இதுவரை 10,444 மாணவ, மாணவியா் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கான சோ்க்கை தாவரிசைப் பட்டியல் கல்லூரியின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது. பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூன் 4-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிக நிா்வாகவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் ஆகிய துறைகளுக்கும், ஜூன் 5-ஆம் தேதி வணிகவியல், பொருளியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கும் நடைபெறுகிறது.

ஜூன் 9-ஆம் தேதி அனைத்து இளநிலை கலைப் பிரிவுகளுக்கும், ஜூன் 10-ஆம் தேதி அனைத்து இளம்அறிவியல் பிரிவுகளுக்கும், ஜூன் 12, 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து இளநிலை கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கும் தொடா் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இக்கல்லூரி கலந்தாய்வு தொடா்பான தகவல்கள் அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க