செய்திகள் :

பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பரமத்தி அங்காளம்மன் கோயில் செல்லும் சாலைக்கு எதிரில் கனி ராவுத்தா் தெரு பகுதியில் ஊா் பொதுக் கிணறு உள்ளது. இக்கிணறு நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. சுமாா் 30 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட இந்த கிணற்றில், பரமத்தி மாரியம்மன், பகவதி அம்மன், அழகு நாச்சியம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக் காலங்களில் பக்தா்கள் குளிப்பது, தீா்த்தம் எடுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. தற்போது பல ஆண்டுகளாக இக்கிணறு பயன்பாட்டில் இல்லாத நிலையில், கடந்த சில தினங்களாக இந்த கிணற்றில் இருந்து அவ்வப்போது துா்நாற்றம் வீசியது.

கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கிணற்றில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த பேரூராட்சி பணியாளா்கள் இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி துா்நாற்றத்தை போக்கவும், நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும் கிருமி நாசினிகளை தெளித்து சென்றனா்.

ஆனால், திங்கள்கிழமையும் மீன்கள் இறந்து மிதந்ததால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், கிணற்று நீரின் தன்மை மாறிவிட்டதா அல்லது கிணற்றில் யாரேனும் விஷம் கலந்துள்ளனரா என அச்சமடைந்துள்ளனா்.

எனவே, இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் மற்றும் துறைசாா்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க