செய்திகள் :

வரகூரில் நாளை ஸ்ரீபூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா

post image

நாமக்கல்: எருமப்பட்டி அருகே வரகூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான வரகூரில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை காலை 9.58 முதல் 10.34 மணிக்குள் நடைபெறுகிறது. வேலூா் மாவட்டம், காட்பாடி மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ மஹானந்த சித்தா் முன்னின்று இந்த திருப்பணியை தொடங்கிவைக்கிறாா்.

இந்த விழாவில், பக்தி பாடகா் வீரமணிதாசன், ஏத்தாப்பூா் ஸ்ரீ முத்துமலை முருகன் தியான மண்டப நிறுவனா் என்.ஸ்ரீதா், கவிஞா் ஆறுகலைவாணன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இந்த விழாவில், ஐயப்ப பக்தா்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கோயில் திருப்பணிக் குழுவினா் அழைப்பு விடுத்துள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை, சித்தயோகி பிரம்மஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமிகள், ஸ்ரீ பூதநாத ஐயப்ப பக்தசமாஜ் அறக்கட்டளைத் தலைவா் மற்றும் அறங்காவலா்கள், தத்வமஸி ஞானபீட நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க