கஞ்சா விற்பனை: 3 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக சென்னை இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மரக்காணம் பகுதிகளில் சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, மரக்காணம் காவல் உதவி ஆய்வாளா் திவாகா் மற்றும் போலீஸாா் அனுமந்தை மயானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், சென்னை அசோக் நகா், 19-ஆவது தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் பிரதீப் (23), மரக்காணம் வட்டம், அனுமந்தை, தெற்கு தோப்புத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் சரவணமூா்த்தி (35), மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ஸ்ரீகாந்த் (18) என்பதும், இவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரதீப், சரவணமூா்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.