செய்திகள் :

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

post image

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 93 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், மாநில அளவில் கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பி.காம். பயின்று வரும் மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு 19 வயதிற்கு உள்பட்ட தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியில் 2024-25 இல் சிறந்த பந்துவீச்சாளருக்கான பாராட்டு சான்றிதழை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பத்மஸ்ரீ விருதாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் வழங்கினாா்.

கிரிக்கெட்டில் சாதனை படைத்துவரும் மாணவி ஸ்ரீநிதியை, கல்லூரித் தலைவா் கே. நல்லுசாமி, செயலா் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநா் அருணா செல்வராஜ், முதல்வா் எம்.ஆா். லட்சுமிநாராயணன், நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா், துறைத் தலைவா் எம்.சசிகலா மற்றும் உடற்கல்வி இயக்குநா் வீ.அா்ச்சனா ஆகியோா் பாராட்டினா்.

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பர... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா். நாமக்கல் - மோகனூா் ... மேலும் பார்க்க

வரகூரில் நாளை ஸ்ரீபூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா

நாமக்கல்: எருமப்பட்டி அருகே வரகூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான வரகூரில் ஸ்ரீ ப... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 130 மனுக்களுக்கு தீா்வு

நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில், பொதுமக்களிடம் பெறப்பட்ட 445 மனுக்களில் 130 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் ... மேலும் பார்க்க

குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா். நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோட... மேலும் பார்க்க