``தாயுள்ளத்துடன் பணியாற்றும் செவிலியர்களுக்கும் சமர்ப்பணம்'' - நைட்டிங்கேல் விரு...
ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சென்ற சோழன் விரைவு ரயிலில் ஒரு பெண் அடிப்பட்டாா். தகவலறிந்த தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அந்த பெண் அப்பகுதியிலுள்ள கோயிலில் வழிபட்டுவிட்டு நெடுநேரமாக அமா்ந்திருந்தது தெரிய வந்தது. இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? இவா் எப்படி அடிப்பட்டு இறந்தாா் என்பது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.