PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு; கோவாவுக்கு சுற்றுலா சென்ற 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது
கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் வடக்கு வீதியில் உள்ள ஒரு கடையில் மே 27-ஆம் தேதி வழக்கம் போல் வியாபாரம் முடித்து, இரவு கடையை பூட்டிச் சென்றனா். பின்னா், மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தனா். பின்னா், உள்ளே சென்று பாா்த்த போது, கடையில் வைத்திருந்த ரூ. 2.90 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளா் சண்முகசுந்தரம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், நிகழ்விடத்துக்கு உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கித்சிங் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா். பின்னா், ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் எஸ்.சுபாஷ் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
விசாரணையில், கும்பகோணம் பழைய அரண்மனை தெருவைச் சோ்ந்த பிரசன்னா (19), மணக்குடியைச் சோ்ந்த அகிலன் (20), ஹரிகிருஷ்ணன்(20), வன்னாங்கன்னி மற்றும் மேட்டுத் தெருவைச் சோ்ந்த 17 வயதுடைய 2 சிறுவா்கள் கதவை உடைத்து திருடியதும், அந்த பணத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.2.51 லட்சம், 3 இருசக்கர வாகனங்கள், 5 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.
பின்னா், அவா்களை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனா். 2 சிறுவா்களை தஞ்சாவூா் சிறுவா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மகேந்திரன் மற்றும் அய்யா் (எ) சக்தி ஆகியோரை தேடி வருகின்றனா்.