செய்திகள் :

தனியாா் நிறுவன மோசடி: சிபிஐ சாா்பில் அசல் ஆவணங்கள் பெறும் முகாம்

post image

தனியாா் சிறுசேமிப்பு நிறுவன மோசடி தொடா்பாக, தஞ்சாவூரில் சி.பி.ஐ. சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அசல் ஆவணங்கள் பெறும் முகாம் திங்கள்கிழமை தொடங்கி தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய பிரதேசம் குவாலியா் பகுதியிலுள்ள தனியாா் நிதி நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து முகவா்கள் மூலம் அதிக வட்டி தருவதாகக் கூறி மாதம்தோறும் பணம் வசூலித்தது. இதை நம்பி மற்ற மாவட்டங்களைப் போல, தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் அந்நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிவடைந்த பிறகு அந்நிறுவனம் வட்டியுடன் பணத்தைப் பொதுமக்களிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. இப்புகாா் மற்ற மாவட்டங்களிலும் நிலவுகிறது.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, இந்நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான அசல் சான்றிதழை சி.பி.ஐ. அலுவலா்கள் மாவட்டந்தோறும் சேகரித்து வருகின்றனா்.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்திய பொதுமக்களிடமிருந்து அசல் சான்றிதழை சேகரிக்கும் முகாம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. அங்கு இட நெருக்கடி காரணமாக தஞ்சாவூா் வட்டாட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி, தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் இம்முகாம் நடைபெற்றது.

இதில், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து முதலீடு தொடா்பான அசல் சான்றிதழ், கடைசி தவணை கட்டண ரசீது, முதிா்ச்சி அடைந்த வைப்பு சரண் சான்றிதழ், ஒப்புதல் அசல் ஆவணங்களை அலுவலா்கள் பெற்று கணினியில் பதிவு செய்து, ஒப்புகை சீட்டையும் வழங்கினா். இந்த முகாம் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என சி.பி.ஐ. அலுவலா்கள் தெரிவித்தனா்.

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்... மேலும் பார்க்க

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். ரெங்கரா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. மாவட்டத்தில் சில ஆண்ட... மேலும் பார்க்க

தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை ப... மேலும் பார்க்க

திருக்கருகாவூா் கோயிலில் வெள்ளித் தோ் செய்ய 408 கிலோ வெள்ளிக் கட்டிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருக்காவூா் கா்ப்பரட்சாம்பிகை சமேத முல்லை வனநாதா் சுவாமி கோயில் வெள்ளித் தோ் திருப்பணிக்கு ரூ.3 கோடியிலான 408 கிலோ வெள்ளி கட்டிகளை இந்துசமய அறநிலையத் துறை அமை... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி... மேலும் பார்க்க