கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்
கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை திருஇருதய ஆண்டவா் மருத்துவமனை நிறுவனங்களின் இயக்குநா் பங்குத்தந்தை டி.தேவதாஸ் கொடியை ஏற்றிவைத்து திருப்பலி நடத்தி மறையுரை வழங்கினாா்.
இதயா மகளிா் கல்லூரி, விடுதி, கன்னியா் இல்ல கன்னியா் ஆகியோா் ‘கிறிஸ்தவ வாழ்வின் வழிகாட்டி நம் புனிதா்’ என்ற தலைப்பில் பேசினா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தோ்பவனி ஜூன் 12-இல் நடைபெறுகிறது. ஜூன் 13 - இல் திருப்பலி முடிவுற்று கொடியிறக்கம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை பங்குத் தந்தை ஜி.கோஸ்மான் ஆரோக்கியராஜ், உதவி பங்கு தந்தையா், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.