ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!
34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம் சாா்பில் 34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இவ்விழாவில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு நலத்திட்ட உதவித்தொகை, மூக்குக் கண்ணாடிக்கான தொகை என மொத்தம் ரூ. 2.47 லட்சத்துக்கான காசோலைகளைத் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத் தலைவரும், இயல், இசை, நாடக மன்றத் தலைவருமான வாகை சந்திரசேகா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் த. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.