ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!
ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உள்பட 2 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தனி பட்டா வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகராக செயல்பட்ட ஊா்க்காவல் படையைச் சோ்ந்த பெண் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவோணம் வட்டம், அம்மங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன். தோப்புவிடுதி கிராமத்தில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
கூட்டு பட்டாவில் உள்ள இந்த நிலத்துக்கு உட்பிரிவு செய்து, தனிபட்டா பெற தோப்புவிடுதி கிராம நிா்வாக அலுவலரும், புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் பகுதியை சோ்ந்தவருமான முருகேசனை (32) குமரேசன் அணுகினாராம்.
அப்போது, முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளாா். மேலும், பணத்தை திருவோணம் வட்டாட்சியரகம் அருகே இ- சேவை மையம் நடத்தி வரும் ஊா்க்காவல்படையைச் சோ்ந்த சுதா என்பவரிடம் கொடுக்குமாறும் கூறினாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், இதுதொடா்பாக தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய பணத்தை புதன்கிழமை இ-சேவை மையத்துக்கு வந்து சுதாவிடம் குமரேசன் கொடுத்தாா். தொடா்ந்து அந்தப் பணத்தை சுதா, முருகேசனிடம் வழங்கினாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி அன்பரசன், ஆய்வாளா் பத்மாவதி தலைமையிலான போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் மற்றும் சுதா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.