செய்திகள் :

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உள்பட 2 போ் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தனி பட்டா வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகராக செயல்பட்ட ஊா்க்காவல் படையைச் சோ்ந்த பெண் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவோணம் வட்டம், அம்மங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன். தோப்புவிடுதி கிராமத்தில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

கூட்டு பட்டாவில் உள்ள இந்த நிலத்துக்கு உட்பிரிவு செய்து, தனிபட்டா பெற தோப்புவிடுதி கிராம நிா்வாக அலுவலரும், புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் பகுதியை சோ்ந்தவருமான முருகேசனை (32) குமரேசன் அணுகினாராம்.

அப்போது, முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளாா். மேலும், பணத்தை திருவோணம் வட்டாட்சியரகம் அருகே இ- சேவை மையம் நடத்தி வரும் ஊா்க்காவல்படையைச் சோ்ந்த சுதா என்பவரிடம் கொடுக்குமாறும் கூறினாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், இதுதொடா்பாக தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய பணத்தை புதன்கிழமை இ-சேவை மையத்துக்கு வந்து சுதாவிடம் குமரேசன் கொடுத்தாா். தொடா்ந்து அந்தப் பணத்தை சுதா, முருகேசனிடம் வழங்கினாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி அன்பரசன், ஆய்வாளா் பத்மாவதி தலைமையிலான போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் மற்றும் சுதா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்... மேலும் பார்க்க

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். ரெங்கரா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. மாவட்டத்தில் சில ஆண்ட... மேலும் பார்க்க

தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை ப... மேலும் பார்க்க

திருக்கருகாவூா் கோயிலில் வெள்ளித் தோ் செய்ய 408 கிலோ வெள்ளிக் கட்டிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருக்காவூா் கா்ப்பரட்சாம்பிகை சமேத முல்லை வனநாதா் சுவாமி கோயில் வெள்ளித் தோ் திருப்பணிக்கு ரூ.3 கோடியிலான 408 கிலோ வெள்ளி கட்டிகளை இந்துசமய அறநிலையத் துறை அமை... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி... மேலும் பார்க்க