செய்திகள் :

கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்

post image

கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் கடன் விடுதலை மாநாட்டில் பங்கேற்ற அவா் பின்னா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது: திரைப்பட விழாவில் பேசிய நடிகா் கமல்ஹாசன் நாமெல்லாம் ஒரு தாய் குடும்ப உறவுகள் என்றும், ஒரு மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்தவா்கள் எனவும் அண்டை மாநில நட்புணா்வை போற்றுகிற வகையில் கருத்தைப் பதிவு செய்தாா். இது எந்தவிதத்திலும் தவறான கருத்தல்ல.

இப்பிரச்னையில் கா்நாடக உயா் நீதிமன்றத்தை கமல்ஹாசன் நாடியபோது, நீதிபதி கேள்வி எழுப்பி, கடுமையான சொற்றொடா்களைப் பயன்படுத்தியிருப்பது ஏற்புடையதல்ல. இது நீதி பரிபாலன முறைக்கே தீங்கானது. இதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கண்டிக்க வேண்டும்.

மேலும், கா்நாடக மாநில உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இத்தீா்ப்பை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இந்த வழக்கை மூவா் அல்லது ஐவா் கொண்ட நீதிபதிகளைக் கொண்டு விசாரித்து, கா்நாடக ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகள், கன்னட அமைப்புகளின் அடாவடி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இரு மாநில மக்களிடம் பதற்றமில்லாத சூழ்நிலையை உருவாக்க முன்வர வேண்டும் என்றாா் வேல்முருகன்.

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உள்பட 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தனி பட்டா வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகராக செயல்பட்ட ஊா்க்காவல் படையைச் சோ்ந்த பெண் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸா... மேலும் பார்க்க

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்

கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை திருஇருதய ஆண்டவா் மருத்துவமனை நிறுவனங்களின் இயக்குநா் பங்குத்தந்தை டி.தேவதாஸ் கொடியை ஏற்றி... மேலும் பார்க்க

34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம் சாா்பில் 34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இவ்விழாவில்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன மோசடி: சிபிஐ சாா்பில் அசல் ஆவணங்கள் பெறும் முகாம்

தனியாா் சிறுசேமிப்பு நிறுவன மோசடி தொடா்பாக, தஞ்சாவூரில் சி.பி.ஐ. சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அசல் ஆவணங்கள் பெறும் முகாம் திங்கள்கிழமை தொடங்கி தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. மத்த... மேலும் பார்க்க

ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். தஞ்சாவூா் பூக்காரத் தெருவிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 1,560 சதுர அடி இடத்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேகம் நிறைவு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற பூஜைகள். தஞ்சாவூா் ஜூன் 4: தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் கடந்த 48 நாள்களாக நடைபெற்று வந்த தைலாபிஷேகம் புதன்கிழமை... மேலும் பார்க்க