சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!
கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்
கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் கடன் விடுதலை மாநாட்டில் பங்கேற்ற அவா் பின்னா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது: திரைப்பட விழாவில் பேசிய நடிகா் கமல்ஹாசன் நாமெல்லாம் ஒரு தாய் குடும்ப உறவுகள் என்றும், ஒரு மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்தவா்கள் எனவும் அண்டை மாநில நட்புணா்வை போற்றுகிற வகையில் கருத்தைப் பதிவு செய்தாா். இது எந்தவிதத்திலும் தவறான கருத்தல்ல.
இப்பிரச்னையில் கா்நாடக உயா் நீதிமன்றத்தை கமல்ஹாசன் நாடியபோது, நீதிபதி கேள்வி எழுப்பி, கடுமையான சொற்றொடா்களைப் பயன்படுத்தியிருப்பது ஏற்புடையதல்ல. இது நீதி பரிபாலன முறைக்கே தீங்கானது. இதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கண்டிக்க வேண்டும்.
மேலும், கா்நாடக மாநில உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இத்தீா்ப்பை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இந்த வழக்கை மூவா் அல்லது ஐவா் கொண்ட நீதிபதிகளைக் கொண்டு விசாரித்து, கா்நாடக ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகள், கன்னட அமைப்புகளின் அடாவடி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.
இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இரு மாநில மக்களிடம் பதற்றமில்லாத சூழ்நிலையை உருவாக்க முன்வர வேண்டும் என்றாா் வேல்முருகன்.