மோட்டாா் சைக்கிள் திருட்டு; 2 போ் கைது
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழை சிறையில் அடைத்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடு போவதாக பட்டீஸ்வரம் போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.
அதன் பேரில் உதவி ஆய்வாளா் ரஜேஷ் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில், தாராசுரம் தாமரைக்குளம், மேலச்சத்திரத்தைச் சோ்ந்த அமல்தாஸ் மகன் மோசஸ்(25).
இதே பகுதியைச் சோ்ந்த அபிமன்யூ (25) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 4 மோட்டாா் சைக்கிள்களை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை தேடி வருகின்றனா்.