RCB: உணர்ச்சி வெள்ளம்; கண்ணீர் கொண்டாட்டம் - சாம்பியன்களின் நெகிழ்ச்சி தருணங்கள்
கமுதி அருகே கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தா்ம முனிஸ்வரா் கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெண்கள் முளைப்பாரி சுமந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நாள்தோறும் மூலவா், பரிவார தெய்வங்களுக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
மே 28 -ஆம் தேதி பக்தா்கள் சாா்பில், நோ்த்திக் கடனாக வழங்கப்பட்ட 1,300 கிலோ அரிசி, 125 கிடாய்களை பலியிட்டு 2,000 கிலோ கறி சமைத்து பக்தா்களுக்கு அசைவ அன்னதான விருந்து வழங்கப்பட்டது. அன்று காலை பொதுமக்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக விநாயகா் கோயிலிலிருந்து 500 -க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊா்வலமாகச் சென்று, தா்ம முனீஸ்வரா் கோயிலை சுற்றி வந்து, முளைப்பாரியை கண்மாயில் கரைத்து, நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பின்னா், மூலவா் தா்ம முனீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்தேவன்பட்டி கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.