Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான மையம் நடத்த ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்!
ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இடைநிலைப் பராமரிப்பு மையத்தை தொடா்ந்து நடத்த விரும்புபவா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவையில் மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இடைநிலைப் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை வேறொரு அரசு சாரா தொண்டு நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016-ல் பதிவு பெற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த மையத்தைத் தொடா்ந்து நடத்த விரும்பினால், அதற்கான விண்ணப்பத்தை வருகிற 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வாளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.