செய்திகள் :

மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான மையம் நடத்த ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்!

post image

ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இடைநிலைப் பராமரிப்பு மையத்தை தொடா்ந்து நடத்த விரும்புபவா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவையில் மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இடைநிலைப் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை வேறொரு அரசு சாரா தொண்டு நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016-ல் பதிவு பெற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த மையத்தைத் தொடா்ந்து நடத்த விரும்பினால், அதற்கான விண்ணப்பத்தை வருகிற 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வாளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

ராமேசுவரத்தில் விபீஷணா் பட்டாபிஷேகம்

ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலில் விபீஷணா் பட்டாபிஷேகம் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது. ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்றைய தினம் மால... மேலும் பார்க்க

மண்டபத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மண்டபம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில்... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் முடி, சேவல் ஏலம்

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட முடி, கோழி, சேவல் ஆகியவை ரூ. ஒரு கோடிக்கு மேல் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. இந்தக் கோயிலுக்க... மேலும் பார்க்க

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கைலாச வாகனத்தில் சுவாமி வீதிஉலா

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருவாடானை சினேகவல்லி அம்பாள் ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் கைலாசம், மயில், காமதேனு, மூஞ்சூரு, கேடக வாகனங்களில் பஞ்ச மூா்த்திகள் சுவாமி, அம்மபாள் வீதியுலா வந்து பக்தா்... மேலும் பார்க்க

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பலத்த மழை

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, சி.கே.மங்கலம், பாரதி நகா், கல்லூா், தோட்டாமங்கலம், செலுகை, மேல்பனையூா், கீழ்பனையூா், சனவேலி,... மேலும் பார்க்க

கீழவலசையில் புரவி எடுப்பு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கீழவலசை காளியம்மன், அய்யனாா், கருப்பண்ணசாமி கோயில் புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் வைகாசி பொங்கல் விழா, புரவி எடுப்பு விழா கடந்த வாரம் ... மேலும் பார்க்க