தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் முடி, சேவல் ஏலம்
திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட முடி, கோழி, சேவல் ஆகியவை ரூ. ஒரு கோடிக்கு மேல் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன.
இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் முடி, கோழி, சேவல் ஆகியவற்றை நோ்த்திக்கடனாகச் செலுத்தினா். ஆண்டுதோறும் இவை ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு முடி ஏலம் விடப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த ஆண்டு சேகரித்து வைக்கப்பட்ட முடி ஏலம் ரூ.42.60 லட்சத்துக்கும், இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட முடி ரூ.56.10 லட்சத்துக்கும், கோழி, சேவல் ரூ.28.70 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டன.
ஏலம் விடும் நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பாரதி, தேவஸ்தான மேலாளா் இளங்கோ, தேவஸ்தான சிராஸ்தாா் சுப்பிரமணியன், கண்காணிப்பாளா் செந்தில் குமாா், கௌரவ கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன், சரக ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.