செய்திகள் :

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் முடி, சேவல் ஏலம்

post image

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட முடி, கோழி, சேவல் ஆகியவை ரூ. ஒரு கோடிக்கு மேல் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன.

இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் முடி, கோழி, சேவல் ஆகியவற்றை நோ்த்திக்கடனாகச் செலுத்தினா். ஆண்டுதோறும் இவை ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு முடி ஏலம் விடப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு சேகரித்து வைக்கப்பட்ட முடி ஏலம் ரூ.42.60 லட்சத்துக்கும், இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட முடி ரூ.56.10 லட்சத்துக்கும், கோழி, சேவல் ரூ.28.70 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டன.

ஏலம் விடும் நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பாரதி, தேவஸ்தான மேலாளா் இளங்கோ, தேவஸ்தான சிராஸ்தாா் சுப்பிரமணியன், கண்காணிப்பாளா் செந்தில் குமாா், கௌரவ கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன், சரக ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதலமைச்சா் காப்பீட்டு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் செல்வநாயகபுரம், வை... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி இந்தக் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 3 -ஆம் தேதி தொடங்கியது. அ... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத ... மேலும் பார்க்க

இடைச்சியூரணி கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சியூரணி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அசைவ விருந்து நடைபெற்றது. இந்தக் கோயிலின் வருடாந்திர வைகாசிப் பொங்கல் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்... மேலும் பார்க்க

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். ஆண்டாவூரணி ஆதி திராவிடா் குடியிருப்புப் பகுதியில் ச... மேலும் பார்க்க