தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி: பொதுமக்கள் அச்சம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
ஆண்டாவூரணி ஆதி திராவிடா் குடியிருப்புப் பகுதியில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கியவாறு இருந்தன.
இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு இந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தபோது மின் பணியாளா்கள் மரக்கம்புகள் மூலம் முட்டுக் கொடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இந்த வழியாகத்தான் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனா். இன்னும் சில மாதங்களில் பருவ மழை பெய்ய உள்ள நிலையில், இந்த மின் கம்பிகளால் பெரும் விபத்து ஏற்படக் கூடும் என இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.