செய்திகள் :

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி: பொதுமக்கள் அச்சம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

ஆண்டாவூரணி ஆதி திராவிடா் குடியிருப்புப் பகுதியில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கியவாறு இருந்தன.

இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு இந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தபோது மின் பணியாளா்கள் மரக்கம்புகள் மூலம் முட்டுக் கொடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இந்த வழியாகத்தான் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனா். இன்னும் சில மாதங்களில் பருவ மழை பெய்ய உள்ள நிலையில், இந்த மின் கம்பிகளால் பெரும் விபத்து ஏற்படக் கூடும் என இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முதலமைச்சா் காப்பீட்டு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் செல்வநாயகபுரம், வை... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி இந்தக் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 3 -ஆம் தேதி தொடங்கியது. அ... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத ... மேலும் பார்க்க

இடைச்சியூரணி கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சியூரணி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அசைவ விருந்து நடைபெற்றது. இந்தக் கோயிலின் வருடாந்திர வைகாசிப் பொங்கல் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விபீஷணா் பட்டாபிஷேகம்

ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலில் விபீஷணா் பட்டாபிஷேகம் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது. ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்றைய தினம் மால... மேலும் பார்க்க