கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
ராமேசுவரத்தில் விபீஷணா் பட்டாபிஷேகம்
ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலில் விபீஷணா் பட்டாபிஷேகம் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்றைய தினம் மாலையில் ராமா் ராவணணை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக இலங்கை மன்னாக ராவணன் தம்பி விபீஷணனுக்கு இலங்கை மன்னனாக பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 2.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்படிக லிங்க பூஜை நடத்தப்பட்டு, சாயரட்சை பூஜை முடிந்தவுடன் கோயிலுக்குப் புறப்பாடு நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கோயில் நடை சாத்தப்பட்டன.
ராமா், சீதை, அனுமன், முருகன், விநாயகா் கோதண்டராமா் கோயிலுக்கு எழுந்தருளினாா். பின்னா், அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கோதண்டராமா் கோயில் குருக்கள் சிரஞ்சீவி, ராமநாதசுவாமி கோயில் தலைமை குருக்கள் உதயகுமாா் ஆகியோா் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்து தீபாராதனை காண்பித்தனா்.
இதில் கோயில் இணை ஆணையா் செல்லதுரை, ஆய்வாளா் சிவகுமாா், கமலநாதன், பஞ்சமூா்த்தி, கோயில் பணியாளா்கள் ஆன்மிக பக்தா்கள் கலந்து கொண்டனா்.
