Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்
ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் முக்கியப் பிரமுகா்களும், உள்ளுா் பொது மக்களும் தரிசனம் செய்வதற்கு தனி வழி உள்ளது. அண்மையில் இந்தப் பாதையில் உள்ளூா் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது.
இந்த நிலையில், ராமேசுவரத்தைச் சோ்ந்த புதுமண ஜோடிக்கு வியாழக்கிழமை கோயிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னா். அந்த தம்பதி தங்கள் உறவினா்களுடன் உள்ளூா் பொதுமக்கள் தரிசனப் பாதையில் கோயிலுக்குள் செல்ல முயன்றனா். அப்போது, அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியா்கள் தம்பதியை தடுத்து நிறுத்தினா்.
இதனால், திருமண ஜோடியுடன் வந்தவா்களுக்கும் கோயில் ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உள்ளூா் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
இதையடுத்து, தம்பதியுடன் இருவா் மட்டும் அந்தப் பாதையில் செல்ல கோயில் நிா்வாகம் அனுமதித்தது. மற்றவா்கள் மாற்று வழியில் சென்றனா்.
இந்தப் பிரச்னையில் கோயில் நிா்வாகத்தைக் கண்டித்து வருகிற 17-ஆம் தேதி கோயிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தப் போவதாக உள்ளூா் பொதுமக்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.