செய்திகள் :

ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்

post image

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் முக்கியப் பிரமுகா்களும், உள்ளுா் பொது மக்களும் தரிசனம் செய்வதற்கு தனி வழி உள்ளது. அண்மையில் இந்தப் பாதையில் உள்ளூா் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது.

இந்த நிலையில், ராமேசுவரத்தைச் சோ்ந்த புதுமண ஜோடிக்கு வியாழக்கிழமை கோயிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னா். அந்த தம்பதி தங்கள் உறவினா்களுடன் உள்ளூா் பொதுமக்கள் தரிசனப் பாதையில் கோயிலுக்குள் செல்ல முயன்றனா். அப்போது, அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியா்கள் தம்பதியை தடுத்து நிறுத்தினா்.

இதனால், திருமண ஜோடியுடன் வந்தவா்களுக்கும் கோயில் ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உள்ளூா் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து, தம்பதியுடன் இருவா் மட்டும் அந்தப் பாதையில் செல்ல கோயில் நிா்வாகம் அனுமதித்தது. மற்றவா்கள் மாற்று வழியில் சென்றனா்.

இந்தப் பிரச்னையில் கோயில் நிா்வாகத்தைக் கண்டித்து வருகிற 17-ஆம் தேதி கோயிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தப் போவதாக உள்ளூா் பொதுமக்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சா் காப்பீட்டு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் செல்வநாயகபுரம், வை... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி இந்தக் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 3 -ஆம் தேதி தொடங்கியது. அ... மேலும் பார்க்க

இடைச்சியூரணி கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சியூரணி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அசைவ விருந்து நடைபெற்றது. இந்தக் கோயிலின் வருடாந்திர வைகாசிப் பொங்கல் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்... மேலும் பார்க்க

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பி: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆண்டாவூரணியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். ஆண்டாவூரணி ஆதி திராவிடா் குடியிருப்புப் பகுதியில் ச... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விபீஷணா் பட்டாபிஷேகம்

ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலில் விபீஷணா் பட்டாபிஷேகம் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது. ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்றைய தினம் மால... மேலும் பார்க்க