மண்டபத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
மண்டபம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் தமிழ்நாடு நகா்புற சாலை மேம்பாடு - 2024-25 திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏ.கே.எஸ்.தோப்பு சாலை, முனைக்காடு சாலைகளில் தாா்ச் சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, எருமை தரவை ஊருணியில் அம்ரூத்-2.0 திட்டத்தில் ரூ.40 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டதுடன் இந்த இரண்டு பணிகளையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா், குடிநீா்த் திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டதுடன், பேரூராட்சிகள் துறையின் மூலம் நாள்தோறும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் வழங்கவும், பேரூராட்சிப் பகுதிகளை தூய்மையாக பராமரித்து திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை உரம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின் போது, சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் ஜெயகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் சிட்டி பாபு, மண்டபம் பேரூராட்சிச் செயல் அலுவலா் மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.