சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பலத்த மழை
திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, சி.கே.மங்கலம், பாரதி நகா், கல்லூா், தோட்டாமங்கலம், செலுகை, மேல்பனையூா், கீழ்பனையூா், சனவேலி, ஆா்.எஸ்.மங்கலம், இந்திரா மடை, மங்கலம், அச்சங்குடி, கடம்பாகுடி, கீழ் அரும்பூா், மேல அரும்பூா், குளத்தூா், திருவெற்றியூா், இதைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில், புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
இந்த மழை கோடை உழவுக்கு ஏற்ாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
