`நிற்காமல் போய்க்கொண்டே இரு, குதிரைக்காரா!' - டபிள்யூ.பி.யேட்ஸ்|கடற்தாண்டிய சொற்...
திருவாடானையில் இன்று மின்தடை
திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாடானை, சி.கே. மங்களம், பாண்டுக்குடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்களக்குடி, அஞ்சுகோட்டை ,குஞ்சங்குளம், வாணியந்தல், கோடனூா், எட்டுகுடி, ஆண்டாவூரணி, சிறுகம்பையூா், அரசூா், டி. நாகினி, செவ்வாய்பேட்டை, செலுகை, கல்லூா், திருவிடைமதியூா், பதனக்குடி, சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்றாா் அவா்.