செய்திகள் :

கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக

post image

ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது.

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர் தலைமையில் சின்னசாமி திடலில் பாராட்டு விழா நடைபெற்றது.

கர்நாடக பேரவையிலிருந்து தொடங்கும் வெற்றிப் பேரணி சின்னசாமி திடல் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் முண்டியடித்துக் கொண்டு உயரமான சுவர்கள், மரங்கள் மீது ஏறினர். மேலும், அத்துமீறி சின்னசாமி கிரிக்கெட் திடலுக்குள் நுழைய முயன்றதால் கர்நாடக காவல் துறையினர் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கியதில் ஒரு பெண் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்த உயிரிழப்புக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிய விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.

அந்தப் பதிவில், “கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற தன்மையால் இன்னும் பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. அடிப்படை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டாததால், அங்கு குழப்பம் மட்டுமே நிலவியது. அப்பாவி மக்கள் இறந்தாலும், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் இருவரும் கிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். இது காங்கிரஸ் அரசுக்கு வெட்கக் கேடானது” எனப் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: ஆர்சிபி வெற்றிப் பேரணி: கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி!

உ.பி.யில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவர் என்கவுன்டர்!

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் கூலித் தொழிலாளியின் ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு... மேலும் பார்க்க