செய்திகள் :

ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பட்டியல்!

post image

புதுதில்லி: துருப்பிடிக்காத எஃகு குழாய்கள் மற்றும் குழாய்கள் உற்பத்தியாளர் ஸ்கோடா டியூப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) வெளியீட்டு விலையான ரூ.140க்கு இணையாக பட்டியலிடப்பட்டு பிறகு 5 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மற்றும் நிஃப்டி-யில் இந்த பங்குகள் ரூ.140ல் வர்த்தகத்தைத் தொடங்கின. பிறகு நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 4.96 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.146.95 ஆகவும் என்எஸ்இ-யில் அதன் பங்குகள் 5 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.147 ஆக முடிந்தது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.880.36 கோடியாக இருந்தது. ஐபிஓ இறுதி நாளன்று ஸ்கோடா டியூப்ஸ் 53.78 மடங்கு சந்தாவைப் பெற்ற நிலையில் அதன் ஆரம்ப பங்கு விற்பனை விலை ரூ.130 முதல் ரூ.140 என குழு முடிவெடுத்தது.

ஐபிஓ மூலம் வரும் நிதியை துருப்பிடிக்காத குழாய்கள் மற்றும் குழாய்களின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கும், பணி மூலதனத் தேவைகள் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றது நிர்வாகம்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிவு!

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சுதா்ஷன் வேணு நிமிக்கப்பட்டுள்ளாா். வரும் ஆக. 25 முதல் இந்த ந... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் 4-ஆவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்த... மேலும் பார்க்க

கடனை ரூ.26,800 கோடியாகக் குறைத்த செயில்

இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உருக்கு நிறுவனமான செயில், தனது கடனை ரு.26,800 கோடியாகக் குறைத்துள்ளது. இது குறித்து அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க