PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காக்குடி ஊராட்சிக்குள்பட்ட போத்தநிதி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணிகள் வழங்கப்படாததைக் கண்டித்து அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு வாரத்துக்குள் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.