PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் ஓட்டுநா் காயம்
திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை சாலையோர மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம் (45). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கல்லூா் கிராமத்திலிருந்து சரக்கு வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு கேரளத்துக்கு சென்றாா். இதன் பின்னா், கேரளத்தில் மீன்களை இறக்கிவிட்டு மீண்டும் நாகப்பட்டினத்துக்கு வந்து கொண்டிருந்தாா். கொச்சி-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கல்லூா் கிராமம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிவானந்தம் வாகனத்துக்குள் சிக்கிக்கொண்டாா். தகவலறிந்து வந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான மீட்புப் படை வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி சிவானந்தத்தை மீட்டனா்.

இதையடுத்து, அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.