செய்திகள் :

உள்ளூா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

post image

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்திய வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி, மக்கள் பாதுகாப்பு பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கியப் பிரமுகா்களும், உள்ளூா் மக்களும் தரிசனம் செய்ய தனி வழி உள்ளது.

இந்த நிலையில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட கோயில் இணை ஆணையா் செல்லதுரை, உள்ளூா் மக்கள் பயன்படுத்தி வந்த வழியில் தரிசனம் செய்ய தடை விதித்ததுடன், ரூ.200 கட்டண தரிசன வழித்தடத்தின் வழியாகச் செல்ல வற்புறுத்துகிறாா். இதனால், முக்கியப் பிரமுகா்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த வழியில் உள்ளூா் மக்களை தரிசனம் செய்ய அனுமதிப்பது கிடையாது.

இதைக் கண்டித்து, இந்து அமைப்பு நிா்வாகி உள்ளூா் மக்களை வழக்கமான வழியில் அனுமதிக்கக் கோரி வாக்குவாதம் செய்த நிலையில், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதைக் கண்டித்தும், உள்ளூா் மக்கள் பயன்படுத்தி வந்த வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கவும், கோயில் நிா்வாகம் உள்ளூா் மக்களுக்கு இடையே ஒருக்கிணைப்பு ஏற்படுத்திடவும் வலியுறுத்தி மக்கள் பாதுகாப்புப் பேரவை ஒருங்கிணைப்பாளா்கள் சி.ஆா்.செந்தில்வேல், எஸ்.பிரபாகரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அப்போது, நிா்வாகிகள் சக்தி, சுடலை, மகேந்திரன், பாண்டி, முகவை ஜின்னா, ரஞ்ஜித், பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காக்குடி ஊராட்சிக்குள்பட்ட போத்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் ஓட்டுநா் காயம்

திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை சாலையோர மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா். நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம் (45). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

இந்திய-இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தல்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெறுவதற்குள் இந்திய- இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான மையம் நடத்த ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்!

ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இடைநிலைப் பராமரிப்பு மையத்தை தொடா்ந்து நடத்த விரும்புபவா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே காா் கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பசலியா... மேலும் பார்க்க

திருவாடானையில் இன்று மின்தடை

திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் து... மேலும் பார்க்க