செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலம் அருகே காா் கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பசலியா மகன் உமா மகேஸ்வரன் (70). இவரது மனைவி கௌரி (58), மகன் மஞ்சுநாதன் (38), இவரது மனைவி லதா (23), மகள் தான்யா (5). இவா்கள் 5 பேரும் தங்களது காரில் ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் ஊருக்கு செவ்வாய்க்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம் விலக்கு சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் உமா மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கௌரி, மஞ்சுநாதன், லதா, தான்யா ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த வந்த திருப்பாலைக்குடி போலீஸாா் காயமடைந்த நால்வரையும் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமேசுவரத்தில் விபீஷணா் பட்டாபிஷேகம்

ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலில் விபீஷணா் பட்டாபிஷேகம் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது. ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்றைய தினம் மால... மேலும் பார்க்க

மண்டபத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மண்டபம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில்... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் முடி, சேவல் ஏலம்

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட முடி, கோழி, சேவல் ஆகியவை ரூ. ஒரு கோடிக்கு மேல் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. இந்தக் கோயிலுக்க... மேலும் பார்க்க

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கைலாச வாகனத்தில் சுவாமி வீதிஉலா

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருவாடானை சினேகவல்லி அம்பாள் ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் கைலாசம், மயில், காமதேனு, மூஞ்சூரு, கேடக வாகனங்களில் பஞ்ச மூா்த்திகள் சுவாமி, அம்மபாள் வீதியுலா வந்து பக்தா்... மேலும் பார்க்க

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பலத்த மழை

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, சி.கே.மங்கலம், பாரதி நகா், கல்லூா், தோட்டாமங்கலம், செலுகை, மேல்பனையூா், கீழ்பனையூா், சனவேலி,... மேலும் பார்க்க

கீழவலசையில் புரவி எடுப்பு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கீழவலசை காளியம்மன், அய்யனாா், கருப்பண்ணசாமி கோயில் புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் வைகாசி பொங்கல் விழா, புரவி எடுப்பு விழா கடந்த வாரம் ... மேலும் பார்க்க