Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
ஆா்.எஸ்.மங்கலம் அருகே காா் கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பசலியா மகன் உமா மகேஸ்வரன் (70). இவரது மனைவி கௌரி (58), மகன் மஞ்சுநாதன் (38), இவரது மனைவி லதா (23), மகள் தான்யா (5). இவா்கள் 5 பேரும் தங்களது காரில் ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் ஊருக்கு செவ்வாய்க்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம் விலக்கு சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் உமா மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கௌரி, மஞ்சுநாதன், லதா, தான்யா ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த வந்த திருப்பாலைக்குடி போலீஸாா் காயமடைந்த நால்வரையும் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.