செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

post image

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் கே.செந்தில் தலைமையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் (எம்ஆா்பி) மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவா்களுக்கு சிறப்புத் தகுதி தோ்வு நடத்த வேண்டும்.

அனைத்து இயக்குநரகங்களிலும் காலியாக உள்ள மருத்துவா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 2026-ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வை முன்னதாக நடத்த வேண்டும். மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் பேராசிரியா் கலந்தாய்வை விரைவுபடுத்த வேண்டும்.

2025-ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு உடனடியாக பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், பணப் படிகளை அனைத்து பிரிவு மருத்துவா்களுக்கும் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அனைவருக்கும் ரூ. 3000 பயணப்படியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அரசு டாக்டா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட 88 போ் கலந்து கொண்டனா்.

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பர... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா். நாமக்கல் - மோகனூா் ... மேலும் பார்க்க

வரகூரில் நாளை ஸ்ரீபூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா

நாமக்கல்: எருமப்பட்டி அருகே வரகூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான வரகூரில் ஸ்ரீ ப... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 130 மனுக்களுக்கு தீா்வு

நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில், பொதுமக்களிடம் பெறப்பட்ட 445 மனுக்களில் 130 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் ... மேலும் பார்க்க

குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா். நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோட... மேலும் பார்க்க