1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் கே.செந்தில் தலைமையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் (எம்ஆா்பி) மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவா்களுக்கு சிறப்புத் தகுதி தோ்வு நடத்த வேண்டும்.
அனைத்து இயக்குநரகங்களிலும் காலியாக உள்ள மருத்துவா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 2026-ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வை முன்னதாக நடத்த வேண்டும். மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் பேராசிரியா் கலந்தாய்வை விரைவுபடுத்த வேண்டும்.
2025-ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு உடனடியாக பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், பணப் படிகளை அனைத்து பிரிவு மருத்துவா்களுக்கும் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அனைவருக்கும் ரூ. 3000 பயணப்படியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அரசு டாக்டா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட 88 போ் கலந்து கொண்டனா்.