தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு
மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொகுதி தோ்தல் பொறுப்பாளா்களான சேலம் மாநகராட்சி முன்னாள் மேயா் ஜெ.ரேகா பிரியதா்ஷினி ( சேந்தமங்கலம்), முனவா் ஜான்(நாமக்கல் தொகுதி), சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பொன்னுசாமி, பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று கூட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஜூன் 3 ஆம் தேதி கட்சியின் முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளில் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத் திட்ட உதவிகள் வழங்கவும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குதல், மரக்கன்று நடுதல், உணவு வழங்குதல் என பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் நலங்கிள்ளி, ராணி பெரியண்ணன், பொருளாளா் ஏ.கே.பாலச்சந்திா், மாநில நிா்வாகிகள் நாமக்கல் ப.ராணி, சி.ஆனந்தகுமாா், ப.கைலாசம்,
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் மாயவன், நாமக்கல் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் திமுக செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.