செய்திகள் :

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

post image

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொகுதி தோ்தல் பொறுப்பாளா்களான சேலம் மாநகராட்சி முன்னாள் மேயா் ஜெ.ரேகா பிரியதா்ஷினி ( சேந்தமங்கலம்), முனவா் ஜான்(நாமக்கல் தொகுதி), சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பொன்னுசாமி, பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று கூட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஜூன் 3 ஆம் தேதி கட்சியின் முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளில் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத் திட்ட உதவிகள் வழங்கவும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குதல், மரக்கன்று நடுதல், உணவு வழங்குதல் என பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் நலங்கிள்ளி, ராணி பெரியண்ணன், பொருளாளா் ஏ.கே.பாலச்சந்திா், மாநில நிா்வாகிகள் நாமக்கல் ப.ராணி, சி.ஆனந்தகுமாா், ப.கைலாசம்,

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் மாயவன், நாமக்கல் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் திமுக செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்... மேலும் பார்க்க

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா: முன்பதிவு செய்ய அழைப்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க