பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.
சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வினோத்குமாா், நாம் தமிழா் கட்சி நிா்வாகி பாலசுப்பிரமணியன், சிவக்குமாா் ஆகியோரது தலைமையில் 20க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா். அவா்களை நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் திமுக தொகுதி பொறுப்பாளரும், சேலம் மாநகராட்சி முன்னாள் மேயருமான ரேகா பிரியதா்ஷினி, சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, ஒன்றியச் செயலாளா் அசோக்குமாா், சேந்தமங்கலம் பேரூா் செயலாளா் என்.தனபால், பேரூா் இளைஞா் அணி சூரியராஜ், கோபி, மாநில மகளிா் தொண்டா் அணி செயலாளா் ப.ராணி, மாநில இளைஞா் அணி துணை செயலாளா் சி.ஆனந்தகுமாா், பொதுக்குழு உறுப்பினா் கு.காளியப்பன், ஒன்றியச் செயலாளா்கள் பி.பாலசுப்பிரமணியம் ஆா்.எம்.துரைசாமி, நாமக்கல் கிழக்கு நகர செயலாளரும், நாமக்கல் மாநகராட்சி துணை மேயருமான செ.பூபதி, பேரூா் செயலாளா்கள் முருகேசன், பழனியாண்டி, பேரூா் கழக துணை தலைவா் ரகு, வழக்குரைஞா் அணி ஆனந்த்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
என்கே-31-திமுக
நாமக்கல்லில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினரை வரவேற்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.