செய்திகள் :

விஜய் டிவியில் 3 புதிய தொடர்கள்!

post image

விஜய் தொலைக்காட்சியில் 3 புதிய தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். தற்போது உள்ள சூழலில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைய தலைமுறையினரும் தொடர்களை விரும்பிப் பார்க்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்கள் மக்கள் மனதை வென்று டிஆர்பியில் முன்னணியில் உள்ளன.

இந்த நிலையில், டிஆர்பி கூட்டுவதற்கு விஜய் தொலைக்காட்சியில் 3 புதிய தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் தொடர் நாளை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட திகில் தொடரான அதே கண்கள் தொடர் நாளை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

வந்தனா மைக்கல் மற்றும் அறிமுக நடிகர்கள் பலர் நடிக்கும் தென்றலே மெல்ல பேசு என்ற தொடர் ஜூன் 9 முதல் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!

கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு!

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்துள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் ... மேலும் பார்க்க

குகேஷின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்! - பிரதமர் மோடி

செஸ் வீரர் குகேஷின் முன்னோக்கியப் பயணம் வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடர் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஆடவர் ப... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் டீசர்!

நடிகர் சசிகுமார் நடித்த ஃப்ரீடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’எனப் பெயர... மேலும் பார்க்க

புரோ கபடி லீக் ஏலம்: அதிக தொகைக்கு ஏலம்போன ஆனில் மோகன்!

புரோ கபடி லீக்கின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஆனில் மோகன் அதிக தொகைக்கு யு மும்பா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.புரோ கபடி லீக் 12-ஆம் சீசனையொட்டி மும்பையில் சனிக்கிழமை (மே 31) வீரா்கள் ஏலம் தொ... மேலும் பார்க்க

கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா... மேலும் பார்க்க