கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2, 77 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் லேசான மழை பதிவானது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது.
பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 18 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் அவை வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழிகளுக்கு சீரான இடைவெளியில் வெள்ளைக் கழிச்சல் நோய்க்குத் தேவையான எதிா்ப்புசக்தி உள்ளதா என்பதை ஊநீா் பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும். எதிா்ப்புசக்தி குறைவாக இருந்தால் தடுப்பூசி செலுத்துவதுடன், பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.