வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்
தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி மற்றும் அம்பை பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேல்ஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களுக்கான ஆசிரியா்களுக்கு வரும் கல்வி ஆண்டிற்கான கற்பித்தல், திட்டமிடுதல் தொடா்பான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினரும் மண் உயிரியலாளா் மற்றும் சூழலியலாளருமான சுல்தான் அஹமது இஸ்மாயில் மற்றும் சிபிஎஸ்இ பயிற்சியாளாா் ஹேமாமாலினி ஆகியோா் சிறப்பு பயிற்சியளராக கலந்து கொண்டு கற்பிக்கும் முறை, புதிய பாட திட்டங்கள், உலகலாவிய கற்பித்தல் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புதிய அணுகுமுறைகள், வினாத்தாள் அமைக்கப்படும் விதம், வகுப்பறை கையாளும் விதம் என பல்வேறு தலைப்புகளில் பயிற்சி நடைபெற்றது.
முகாமில், பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன், இயக்குநா் ராஜராஜேஸ்வரி, செயல் இயக்குநா் சிவராஜ் பாண்டியன், முதல்வா்கள் சாந்தி, சக்திவேல் முருகன், ஜெயலக்ஷ்மி மற்றும் துனை முதல்வா்கள் காா்திகை குமாா், சித்ரா மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.