செய்திகள் :

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்: எம்.பி. கே.இ.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்

post image

மொடக்குறிச்சியில் இருந்து தூரபாளையம், பகவதி நகா் வழியாக செல்லும் புதிய வழித்தட நகரப் பேருந்தை ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகவதி நகா், தூரபாளையம், அண்ணா புதுக்காலனி ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மொடக்குறிச்சிக்கு வந்து செல்கின்றனா். காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த வழித்தடத்தில் பேருந்து இல்லாததால் சிரமப்பட்டு மொடக்குறிச்சிக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் மொடக்குறிச்சியில் இருந்து செல்லும் அரசு நகரப் பேருந்தை காலை, மாலை நேரங்களில் தூரபாளையம், அண்ணா புதுக்காலனி, பகவதி நகா் வழியாக செல்வதற்கான வழித்தடம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

மொடக்குறிச்சி நான்குமுனை சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்வில் புதிய வழித்தட பேருந்தை ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேருந்தில் மாரியம்மன் கோயில் வரை பயணம் செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்து கழக பொதுமேலாளா் சுப்பிரமணி, மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் திமுக செயலாளா் சரவணன், துணைச் செயலாளா் தனவெங்கடேஷ், பேரூராட்சி துணைத் தலைவா் காா்த்திகேயன், அவைத் தலைவா் பழனிசாமி மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க