செய்திகள் :

ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக விஜய் பேசினாரா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

post image

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பொதுக்குழுவில் அதிமுக குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

அதில், துரோக அதிமுக என்று குறிப்பிட்டுள்ளனர். துரோகம் செய்தது நாங்கள் கிடையாது. திமுக தான் நாட்டுக்கே துரோகம் செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் எல்லாம் நாட்டு மக்களுக்கு சிறப்பான திட்டங்களை வழங்கியிருக்கிறோம்.

திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அனு தினமும் கொலை, கொள்ளை,  திருட்டு, வழிபறி, பாலியல் வன்கொடுமை என்று குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசமான ஆட்சி தான் ஸ்டாலின் மாடல் ஆட்சி.

திமுக
திமுக

இவர்கள் தான் துரோக ஆட்சி. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. அதுவே அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது மற்றவர்கள் மீது பழி போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மதுரையில் சாக்கடையைத் துணி வைத்து மூடி இருந்த காட்சியே மோசமான ஆட்சிக்கு சாட்சி. ஆதவ் அர்ஜூனா பிரச்னை குறித்து தவெக தலைவர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. அதுகுறித்து ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துவிட்டார். அந்த விவகாரம் முடிந்துவிட்டது.

விஜய்

மற்றபடி நடிகர் விஜய் என்னிடம் எதுவும் பேசவில்லை. தேமுதிக கட்சியுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது. அதில் ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் நினைக்க வேண்டாம். அது நடக்கவும் நடக்காது.” என்றார்.

'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி 'ஒரு நாள் முதல்வர்' ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் 'ஒரு நாள் பதவி உயர்வு' திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர... மேலும் பார்க்க

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்... மேலும் பார்க்க

DMK: "மதுரைக்காரர்கள் என்றால் திமுக தலைமைக்குப் பிடிக்காது" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?

"மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பே... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப்: "ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீதியில் தங்கும் நிலை" - BJPக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைநகர் புது டெல்லியில் ஜங்க்ப்புரா பகுதியில் உள்ள மதராஸி கேம்ப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசித்துவரும் தமிழர்களின் வீடுகள், நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பு என்று கூறி, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அ... மேலும் பார்க்க

'தகுதியற்ற பட்டங்கள்; தேசிய கல்விக்கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும்!' - மீண்டும் அரசை சீண்டும் ஆளுநர்

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்... மேலும் பார்க்க

"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்" - உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?

கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட... மேலும் பார்க்க