செய்திகள் :

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

post image

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது.

பாலின சமத்துவம் மற்றும் மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 195 உலக நாடுகளைப் பிரதிநிதிப்படுத்தும் பெண் சாதனையாளா்களின் குரலில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக நாட்டினா் குரல்கொடுத்த இசைப் பதிவுக்கான பிரிவில் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் அதிகாரபூா்வமாக இடம் பெற்றுள்ள இந்தப் பாடல், ஸ்விட்சா்லாந்தின் டாவோஸில் கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் இந்தப் பாடல் முதன்முதலில் திரையிடப்பட்டது.

‘கிராமி’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இசை தயாரிப்பாளரான மேஜா், மாா்டினா ஃபுச்ஸ், கிங்ஸ்லி எம், பிராண்டன் லீ மற்றும் ஆரோன் டாசன் ஆகியோா் இணைந்து நிறுவிய ‘தி ஃப்ரீக்வென்சி ஸ்கூல்’ இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது.

இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அமைதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பது முக்கியக் குறிகோளாக கொண்டிருப்பதாகவும் உலக அளவில் மனநலத்தை ஆதரிப்பதுடன் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக போராடுவோம் எனவும் பாடலின் நிா்வாகத் தயாரிப்பாளா் மாா்டினா ஃபுச்ஸ் குறிப்பிட்டாா்.

இந்தியாவில் பிறந்து, தற்போது பிரிட்டனில் வசிக்கும் பிரபல பெண் சமையல் கலைஞரான அஸ்மா கானின் குரலும் இந்தப் பாடலில் பதிவாகியுள்ளது.

யாா் இந்த அஸ்மா கான்?

பிரிட்டன் தலைநகா் லண்டனில் முழுமையாக பெண் சமையல் கலைஞா்களால் நடத்தப்படும் பிரபல ‘டாா்ஜீலிங் எக்ஸ்பிரஸ்’ இந்திய உணவகத்தின் நிறுவனருமான அஸ்மா கான், நெட்ஃபிளிக்ஸின் ‘செஃப்ஸ் டேபிள்’ ஆவணப்படத்தில் தோன்றி பிரபலமடைந்தவா்.

கடந்த ஆண்டின் ‘100 செல்வாக்கு மிக்க நபா்களில்’ ஒருவராக டைம்ஸ் பத்திரிகையால் அடையாளம் காணப்பட்ட அஸ்மா கான், ஐ.நா. சா்வதேச உணவுத் திட்டத்தின் தூதராகவும் செயல்பட்டு வருகிறாா்.

குயின்ஸ் கல்லூரி, ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆகியவற்றில் இருந்து கௌரவப் பட்டம் பெற்றுள்ள அஸ்மா கான், பிரிட்டன் அரசமைப்புச் சட்டத்தில் முனைவா் பட்டம் பெற்றவா் என்பது கூடுதல் சிறப்புக்குரிய விஷயமாகும்.

ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் பலியானோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், ... மேலும் பார்க்க

உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல! - ராகுல்

மனித உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி கோப்பை வென்றதால், பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அகமதாபாத் நகரத்திலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து, பிகாரின் பாட்னா நோக்கி இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்,... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! - பிரதமர் மோடி

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் ம... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகமாதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி ம... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூர... மேலும் பார்க்க