செய்திகள் :

Russia - Ukraine War: பயங்கர தாக்குதலுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?

post image

நேற்று முன்தினம், ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று துருக்கியில் இரு நாடுகளும் இரண்டாம் கட்டப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு, உக்ரைன் நேற்று ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது. இதனால், நேற்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்குமா என்று பெரியளவில் உலக நாடுகளின் மத்தியில் சந்தேகம் எழுந்திருந்தது.

ரஷ்யா, உக்ரைன்
ரஷ்யா, உக்ரைன்

சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இரு நாடுகளும் நேற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. இதுகுறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல்கள்...

இந்த மாத (ஜூன்) இறுதிக்குள், ரஷ்யா அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.

இரு நாடுகளும் முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட போர் நிறுத்தம் குறித்த அறிக்கைகளை துருக்கி அதிகாரிகள் முன்னால் மாற்றம் செய்துகொண்டது.

அடுத்தகட்டமாக, இன்னும் உள்ள சில சிறைக் கைதிகளை இரு நாடுகள் அவரவர் நாட்டிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளன.

உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளின் பட்டியல் ரஷ்யாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை ரஷ்யா மீண்டும் உக்ரைனிற்கு அனுப்ப வேண்டும் என்று உக்ரைன் அதிபர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

துருக்கி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஓன்கு கெசெலி, 'இன்று நடந்த சந்திப்பு எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடிந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

``ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசுவது தேவையில்லாதது!'' - நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டையில் பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தத்தின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி வருகின்ற எட்டாம் தேதி நடைபெற உள்ளது.இன்று அவரது இல்லத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தி... மேலும் பார்க்க

Kamal: ``கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை; தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் வந்தது'' - கே.என்.நேரு

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் தக்ஃலைப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தபடம் நாளை (ஜூன் 5 ஆம் தேதி) வெளியாக உள்ள நிலையில் சென்னையில் கடந்த சில தின... மேலும் பார்க்க

``அண்ணன் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு; நான் ஒரு கட்சியில் இணைந்தால்..'' - காளியம்மாள்

சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், அடுத்து எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தவெக கட்சியில் இணைவார் என்ற தகவல்கள் வெளியானாலும் இதுவரை அதுகுறித்து எந்த அறி... மேலும் பார்க்க

Africa: போர் வீரன் டு அதிபர் - ஆப்பிரிக்காவின் `புதிய ஒளி' இப்ராஹிம் டிராரே ஏன் முக்கியமானவர்?

ஆப்பிரிக்கா அதன் புதிய நம்பிக்கை ஒளியைக் கண்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் ஒரு நாட்டை வழிநடத்தும் தலைவரான இப்ராஹிம் டிராரே தான் அந்த வெளிச்சம். 37 வயதாகும் இவர் புர்கினா ஃபெசோ ராணுவ ஆட்சிக்... மேலும் பார்க்க

பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் சிலையை கடத்தி, ரஷ்ய தூதரகம் முன் நிறுத்திய போராளிகள்.. என்ன செய்தார்கள்?

பாரிஸில் உள்ள கிரேவின் அருங்காட்சியகம் பிரான்ஸின் மிகவும் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்று. 1882-ல் திறக்கப்பட்ட இது, வரலாறு, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் சிறந்து விளங்கும், அல்ல... மேலும் பார்க்க

Doctor Vikatan: 17 வயதில் 33 கிலோ; நன்றாகச் சாப்பிட்டும் அதிகரிக்காத எடை.. என்னதான் பிரச்னை?

Doctor Vikatan: என் மகளுக்கு வயது 17.அவள் மிகவும் மெலிந்து காணப்படுகிறாள் .160 செ.மீ உயரம் இருக்கிறார். அவரது உடல் எடை 33 அல்லது 34-க்கு மேல் ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை. பீரியட்ஸ் நாள்களில் மிகவும்... மேலும் பார்க்க