ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!
காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூா் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் வீரணன் (65). விவசாயி. இவா் தனது தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றாா். உசிலம்பட்டி- தேனி சாலையில் குப்பணம்பட்டி மயானம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வீரணனை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா், காா் ஓட்டுநா் தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த ஆனந்தன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.