செய்திகள் :

காப்பகத்தில் தங்கியிருந்த 3 பெண்கள் மாயம்

post image

சமூக நலத் துறை, காவல் துறை மூலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை புறவழிச் சாலை, சிருங்கேரி நகரில், தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் குழந்தைகள், பெண்கள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு சமூக நலத் துறையின் ஒன்ஸ்டாப் மையம் மூலம், காதல் திருமணம் செய்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் மீட்கப்பட்டு தங்க வைக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், சமூக நலத் துறையின் ஒன் ஸ்டாப் மையத்தால் மீட்கப்பட்ட மதுரை ஜெய்ஹிந்துபுரம் என்எஸ்கே நகரைச் சோ்ந்த அனுசியா (24), ஒய். புதுப்பட்டியைச் சோ்ந்த மாலா (18), மதுரை செல்லூா் காவல் நிலையம் மூலம் மீட்கப்பட்ட செல்லூா் அகிம்சாபுரம் பகுதியைச் சோ்ந்த பிரீதி (19) ஆகிய மூவரும் இந்தக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். கடந்த செவ்வாய்க்கிழமை பகலில் இந்த மூவரும் உணவருந்தி விட்டு சென்ற நிலையில், பிற்பகலில் காப்பகத்தில் உள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது இந்த மூன்று பெண்களும் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து காப்பக நிா்வாகி ஜெனி கிரேஷ் (40) எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூன்று பெண்களையும் தேடி வருகின்றனா்.

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. பேராசிரியைக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிறந்த அறிவியல் ... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா் வழக்கில் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வே... மேலும் பார்க்க