செய்திகள் :

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

post image

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கடந்த மாதம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ரேஷன் கடைகள், வணிக மற்றும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை விநியோக மையம் மற்றும் கிடங்குகள் ஆகியவற்றில் எடை அளவு குறித்து 111 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 31 இடங்களில் வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது.

இதுபோல பொட்டலப் பொருள்கள் விதிகளின்படி சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புனிதத் தலங்களில் உள்ள 37 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அதிகபட்ச சில்லறை விற்பனையைவிட கூடுதல் விலைக்கு விற்ற 3 கடைகள் கண்டறியப்பட்டன.

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் 35 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தினை தொழிலாளா்களுக்கு வழங்காத ஒரு நிறுவனம் கண்டறியப்பட்டது. ஆய்வில் விதிமீறல் கண்டறியப்பட்ட மொத்தம் 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி கூறியதாவது: எடை அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்தக் கூடாது. பொட்டலப் பொருள்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது தண்டனைக்குறியதாகும். ஆய்வின்போது வேறுபாடுகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமா்த்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா் மீது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்து விதிக்கப்படும் என்றாா்.

சென்னிமலை அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற எதிா்ப்பு

சென்னிமலை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப் பகுதி சுமாா் 1,700 ஏக்... மேலும் பார்க்க

சிப்காட் விவகாரம்: பெருந்துறைக்கு வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு

பெருந்துறை சிப்காட் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் பெருந்துறை வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட அரசியல் கட்சியினா் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை அண்ணா ச... மேலும் பார்க்க

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மோசடி: 4 போ் கைது

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுகூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல்ராஜ் (55). ஐ.டி. நிறுவன ஊழியா். டெலி... மேலும் பார்க்க

பால் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருகள் பறிமுதல்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் பால் வேனில் மறைத்து கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களில் குட்கா, புகையிலைப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

சென்னிமலை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை, திருமுகமலா்ந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம், ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,... மேலும் பார்க்க