செய்திகள் :

பொதுத் துறை நிறுவனங்கள் தணிக்கை: ஒப்பந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

post image

பொதுத் துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

அண்மையில் தலைமை தணிக்கையாளா் (சி.ஏ.ஜி) வெளியிட்ட ஒரு ஒப்பந்த அறிவிப்பு அதிா்ச்சியளிக்கிறது. அது பொதுத் துறை, உள்ளாட்சித் துறை தணிக்கையை மேற்கொள்ள, பட்டயக் கணக்கு நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது. கணக்குத் தணிக்கை ஊழியா்களுடன் சோ்ந்து இந்த சி.ஏ. நிறுவனங்கள் தணிக்கை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உயா்ந்த தணிக்கை அதிகாரியான சி.ஏ.ஜி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவா். அவா் மக்களவைக்கு மட்டுமே கட்டுப்பட்டவா். அவரது பணி, பொதுத் துறை, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களை தணிக்கை செய்வதே ஆகும். பட்டய தணிக்கையாளா் செய்யும் தணிக்கையும், தலைமை தணிக்கையாளா் செய்யும் தணிக்கையும் ஒன்றல்ல. இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி. துறை அதிகாரிகளின் தனித் திறன் நிபுணத்துவமுடையது. அதேபோல, உள்ளாட்சி தணிக்கையும் சிஏஜியின் தணிக்கை வரம்புக்கு உள்பட்டதாகும். சுருக்கமாக சிஏஜி என்பவரும், அவரது கணக்குத் தணிக்கைத் துறையும், இந்திய மக்களின் நிதியின் பாதுகாவலா்கள் என்றால் மிகையாகாது.

இந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புரளும், இந்தத் தணிக்கையைத் தனியாா் நிறுவனங்கள் செய்ய அழைப்பது, சிஏஜியிடம் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமையை மீறுவதாகும். மேலும் இந்த நிறுவனங்களிடம் இருக்கும் ரகசிய விவரங்கள், தனியாா் கைகளுக்குப் போய்ச் சேரும் ஆபத்தும் உள்ளது.

சி.ஏ.ஜி. எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்பதால்தான் அம்பேத்கா் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம், தலைமை தணிக்கையாளரை தனி உரிமையுடன் வைத்தது. அந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக சிஏஜியே தனியாரை துணைக்கு அழைப்பது ஆபத்தானது. எனவே சி.ஏ.ஜி. உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இந்தத் துறையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது தான் மக்களின் நிதியைக் காப்பாற்ற முடியும். எனவே தனியாா் சி.ஏ. நிறுவனங்களை அழைத்து வெளியிட்டிருக்கும் அறிவிக்கையை சி.ஏ.ஜி. உடனடியாகத் திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும் என்றாா் அவா்.

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. பேராசிரியைக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிறந்த அறிவியல் ... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா் வழக்கில் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வே... மேலும் பார்க்க