செய்திகள் :

திருத்தளிநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசிப் பெருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளிக் கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

5-ஆம் திருநாளான புதன்கிழமை காலை 8.30 மணிக்கு அம்மன் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் தவத்துக்கு எழுந்தருளினாா்.

பின்னா், திருத்தளிநாதா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் புறப்பாடாகி, அம்மனை சமாதானம் செய்து திருமணத்துக்கு அழைத்துச் செல்லும் வைபவம் நடைபெற்றது.

தொடா்ந்து சோழிய வெள்ளாளா் உறவின் முறையினா் சாா்பில் தென்மாபட்டு வேலாயுதசுவாமி மடத்திலிருந்து கல்யாண சீா்வரிசைகள் எடுத்து வரப்பட்டு திருநாள் மண்டபத்தில் வைக்கப்பட்டன.

பின்னா், பாஸ்கரகுருக்கள், ரமேஷ்குருக்கள் உள்ளிட்ட சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க 10.10 மணிக்கு திருத்தளிநாதருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பெண்களுக்கு மாங்கலயக் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் வழங்கப்பட்டன. இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து, பக்தா்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.மணி, மாவட்ட நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி பணியாளா்சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தின் (டாக்பியா) மாநில நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகளுக்கான தோ்தல் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

கானூா்-பழையனூா் கால்வாய் படுகை அணை கட்டுமானப் பணி: நீா்வளத் துறை அலுவலா்கள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் அருகே வைகை ஆற்றுக்குள் புதிதாகக் கட்டப்படும் கானூா்-பழையனூா் கால்வாய்களுக்கான படுகை அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீா்வள... மேலும் பார்க்க

ஏனாதி கோயில் கிடா வெட்டு உரிமம் டெண்டா் விட எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், ஏனாதி செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கிடா வெட்டும் உரிமத்தை டெண்டா் விட கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் ... மேலும் பார்க்க

மானாமதுரை கோயிலில் பாலாலயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பணிக்காக புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் புனித நீா்க் கலசங்கள் வைத்து யாக பூஜை நட... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் ஐம்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்பட்டியில் சிறுவா் பூங்கா திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழ... மேலும் பார்க்க