தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
கூட்டுறவு வங்கி பணியாளா்சங்க நிா்வாகிகள் தோ்வு
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தின் (டாக்பியா) மாநில நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகளுக்கான தோ்தல் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இதற்கு கௌரவ பொதுச் செயலா் சி.குப்புசாமி தலைமை வகித்தாா். இதில் சங்கத்தின் மாநிலத் தலைவராக சேகா் (கடலூா்), பொதுச் செயலராக பாலகிருஷ்ணன் (திருவாரூா்) , பொருளாளராக ‘ செந்தில்குமாா் (திருவாரூா்) , துணைத் தலைவா்களாக செந்தில்குமாா் (சிவகங்கை) , கிருஷ்ணமூா்த்தி (விருதுநகா்), இணைச் செயலா்களாக ஈரோடு முத்துகிருஷ்ணன், செங்கல்பட்டு நந்தகோபால் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் சரவணன், நாகராஜன், ராமசாமி, கோபிநாதன், பரமானந்தம், முத்துமாயாண்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.