Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பிள்ளையாா்பட்டியில் ஐம்பெரும் விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்பட்டியில் சிறுவா் பூங்கா திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா, நலிவுற்றோருக்கு புத்தாடைகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்வி, சமூக நல அறக்கட்டளை நிறுவனா் அண்ணாமலை தலைமை வகித்தாா். குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறுவா் பூங்காவைத் திறந்து வைத்து வாழ்த்திப் பேசினாா்.
பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தலைமை குருக்கள், பிச்சைக் குருக்கள் ஆகியோரும் வாழ்த்திப் பேசினா்.
அறக்கட்டளை சாா்பில் பூங்கா, பிள்ளையாா்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. மேலும், பிள்ளையாா்பட்டி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, கற்பக கலையரங்கில் தமிழ் வளா்ச்சி விழிப்புணா்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற 12 பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சமூக சேவையாளா்கள் 16 போ்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நலிவுற்றோா் 103 நபா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
கரம்பக்குடி வட்டாட்சியா் ஜமுனா, சிவகங்கை ஐஆா்சிடிஎஸ் தலைவா் ஜீவானந்தம், திருப்பத்தூா் மணிகண்டன், மருத்துவா் கீதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக மருத்துவா் கருப்பையா வரவேற்றாா். பொறியாளா் சத்திய குமாா் நன்றி கூறினாா்.