சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
மலை கிராமங்களில் ஜூன் 8-இல் கிராம சபைக் கூட்டம்
தேனி மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும் மலைக் கிராமங்களில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கான வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து வருகிற 8-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டிபட்டி ஒன்றியம், ராஜக்காள்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கதிா்வேல்புரம், போடி ஒன்றியம் அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட அலங்காரம், அண்ணாநகா், சொக்கனலை, பட்டூா், கரும்பாறை, குறவன்வழி, கொத்தமல்லிக்காடு, கொட்டகுடி ஊராட்சிக்கு உள்பட்ட முட்டம், முதுவாா்குடி, அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட மேலப்பரவு, சோலையூா், சிறைக்காடு, க.மயிலை ஒன்றியம், மேகமலை ஊராட்சிக்கு உள்பட்ட நொச்சிஓடை, முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட தாழையூத்து, உப்புத்துறை, கடமலைக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட கரட்டுபட்டி, பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி ஊராட்சிக்கு உள்பட்ட நேருநகா், எண்டப்புளி, தேனி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊஞ்சாம்பட்டி ஆகிய கிராமங்களில் ஜூன் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.