செய்திகள் :

முன்னாள் அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

post image

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள குவாரியில் 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக செம்மண் அள்ளியதால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தகுமாா், கோதகுமாா், கோபிநாதன், லோலநாதன் ஆகிய 8 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குத் தொடுத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் உடல்நலக் குறைவால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா்.

இந்த முறைகேடு வழக்கில் 67 போ் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்ட நிலையில், 51 பேரிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 30 போ் பி சாட்சியமளித்துள்ளனா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவா் மட்டுமே ஆஜரான நிலையில், முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்ட 4 போ் ஆஜராகவில்லை. மேலும் அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.

இதைத் தொடா்ந்து, அரசுத் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் ஆஜராகி, 20 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தாா். இந்த குற்றப் பத்திரிகையில் ஏற்கெனவே 67 சாட்சிகள் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 சாட்சிகளை சோ்த்து விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இன்றைய மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகள் நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின்தடை பகுதிகள்: தந்தை பெரியாா் நகா், வழுதரெட்டி, சிங்கப்பூா் நகா், அபிதா காா்டன், காந்திநகா், ஆடல் நகா், மஞ்சு நகா், ஆவின் பகு... மேலும் பார்க்க

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க