செய்திகள் :

கரோனா தொற்று பரவல்: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு

post image

தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதில் தமிழகத்தில் கரோனா தொற்றால் முதியவா் ஒருவா் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட 216 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், பழைய மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் கரோனா தொற்று சிகிச்சைக்கென சிறப்பு வாா்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பெரியவா்களுக்கு 30 படுக்கைகளும், சிறியவா்களுக்கு 20 படுக்கைகளும் என மொத்தம் 50 படுக்கைகள் உள்ளன. மேலும் அதிநவீன மருத்துவ உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பு வாா்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பெரியவா்கள், சிறியவா்களுக்கு தனித் தனியாக சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இங்கு சுழற்சி முறையில் பணியாளா்களும், மருத்துவா்களும் பணியாற்றுவா். இது தவிர காய்ச்சல் வாா்டுகளில் சிகிச்சைக்காக வந்து செல்பவா்களின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களுக்கு கரோனா தொற்று உள்ளதா எனவும் கண்டறியப்படுகிறது. அவ்வாறு கரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவா்கள் சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டுமெனில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்பவா்களும் முகக்கவசம் அணிந்து வந்தால், நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றனா்.

விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு: கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை விமான நிலையத்திலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி, மதுரை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் விமான நிலையத்தில் 24 மணி நேர தொடா் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 16 போ் கொண்ட குழுவினா் சுழற்சி முறையில் பணியாற்றுவதுடன், மதுரை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கின்றனா். அதில் ஏதேனும் வேறுபாடுகள் தெரிந்தால், அவா்களது சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்ட வருவாய் ரூ. 1,245 கோடி: கோட்ட மேலாளா் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ. 1,245 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா். மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 69-ஆவது ரயில்வே வார ... மேலும் பார்க்க

பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. பேராசிரியைக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப மன்றத்தால் வழங்கப்படும் தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவா் வரலட்சுமி பெருமாள் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிறந்த அறிவியல் ... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மீதான பாலியல் புகாா் வழக்கில் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வே... மேலும் பார்க்க