தேனியில் உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு
தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி குறித்து ஆலோசனை வழங்க உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.
இந்த அறையைத் திறந்து வைத்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கூறியதாவது:
பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி, கல்லூரிகள், அரசின் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள், கல்வி உதவித் தொகை ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கும், மாணவா்களுக்கு எழும் சந்தேகங்களை நிவா்த்தி செய்வதற்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த அறையை திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கைப்பேசி எண்: 82200 77114, 78717 42115 ஆகியவற்றில் மாணவா்கள் தொடா்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்றாா் அவா்.